ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அண்ணன் வீட்டில் 40 பவுன்  திருடிய தம்பி கைது

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே அண்ணனின் வீடு புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிய அவரது தம்பியை

Updated On :2 மே 2013, 6:46 am

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே அண்ணனின் வீடு புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிய அவரது தம்பியை புவனகிரி போலீஸார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புறப் பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் இவரது தம்பி முரளிதாஸ் (52) தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

முரளிதாஸ் கடந்த ஒரு மாதமாக கடன் தொல்லையால் வெளியூரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணன் பிரேமநாதன் குடும்பத்துடன், முரளிதாஸ் மனைவியையும் அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை காலை கீரப்பாளையம் அருகே உள்ள வடப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று மாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார்.

இது குறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் சந்தேகத்தின் பேரில் செல்போன் மூலம் தம்பி முரளிதாஸை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாகம் பிரிக்காததாலும், கடன் தொல்லை தாங்க முடியாமலும் நகைகள் மற்றும் ரொக்கத்தைத் திருடியதை முரளிதாஸ் ஒப்புக் கொண்டார். அதன் பேரில் போலீஸார் முரளிதாஸை கைது செய்து, நகைகளை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.